நேபாளம் டிச, 28
நேபாளத்தின் பாக்லுங் மாவட்டத்தில் சற்று நேரத்திற்கு முன் அடுத்தடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7ஆகவும் இரண்டாவது 5.3 ஆகவும் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பாதிப்பு குறித்து உடனடியாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.