இங்கிலாந்து டிச, 27
கொரோனா பாதிப்பு நிலவரங்களை புத்தாண்டில் இருந்து வெளியிடப் போவதில்லை என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. அந்நாட்டு பாதுகாப்பு நிறுவன தொற்றுநோய் தடுப்பு பிரிவு தலைவர் நிக் வாட்கின்ஸ் தெரிவித்துள்ளார். மக்கள் கொரோனாவுடன் வாழ பழகியதால் பாதிப்பு விபரங்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சீனாவில் பாதிப்பு நிலவரங்கள் வெளியிடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.