துபாய் டிச, 26
ஐக்கிய அரபு அமீரகத் துபாய் கிசஸ் பகுதியில் உள்ள கேபிடல் பள்ளி உள்ளரங்கில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அமைப்பின் தலைவி ஷீலா தலைமையில் மிக பிரமாண்டமான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. ஆடல், பாடல், சிலம்பாட்டம், கும்மி, குழந்தைகளின் கிறுஸ்துமஸ் ஆடை அணிவகுப்பு உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளோடு ஜெகநாதன் மற்றும் அருணா வீரராகவன் தொகுத்துவழங்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அரவிந்த் குழும நிறுவனத்தின் நிறுவனர் பிரபாகர், சல்வா குரூப் நிறுவனத்தின் நிறுவனர் பகவதி ரவி, கிரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மீன், கேப்டன் டிவி முதன்மை நிருபர் கமால் கேவிஎல், தினகுரல் தமிழ் தேசிய நாளிதழ் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழின் இணை ஆசிரியர் நஜீம் மரிக்கா, வகிதா பானு, பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பார்வையாளர்களாக டிக்டாக் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்தோடு கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் நிறைவாக அமீரக தமிழ் சங்கத்தின் தலைவி ஷீலா நன்றி கூறி நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கி மேலும் நிகச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.