Spread the love

நாகப்பட்டினம் டிச, 24

திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சீதளா பாலாஜி தலைமை தாங்கினார். கால்நடை உதவி டாக்டர்கள் பிரியதர்ஷினி, சிவபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, மலடு நீக்கம், கன்றுகள், ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது. இந்த முகாமில் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன் பெற்றன. இதில் சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.மேலும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இம்முகாமில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் வடிவேல், தம்பிராஜா, வார்டு உறுப்பினர் காந்திராஜன் மற்றும் கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *