Spread the love

நாகப்பட்டினம் டிச, 23

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்கா கந்தூரி விழா தொடங்குவதை முன்னிட்டு விழா ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து நாகை சட்ட மன்ற உறுப்பினர் முகம்மது ஷா நவாஸ் ஆய்வு செய்தார். தர்கா குளத்தை சுற்றி தடுப்பு கம்பி அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.

அப்போது தர்காவை சுற்றியுள்ள சாலைகளில் பேவர் பிளாக் அமைப்பது மற்றும் யானைகட்டி முடுக்கு பகுதியில் இரு சக்கர வாகன நிறுத்துமிடம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் இந்த ஆய்வின் போது தர்கா நிர்வாகிகள், நகர்மன்ற துணைத் தலைவர் செந்தில் குமார் மற்றும் நகர்மன்ற உறுப்பினர், நகராட்சி ஆணையர், நகராட்சி செயற்பொறியாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *