Spread the love

செங்கல்பட்டு டிச, 22

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

மாவட்டந்தோறும் நடைபெற்று வருகின்ற புத்தகத் திருவிழாக்களின் ஒரு பகுதியாக செங்கல்பட்டு புத்தகத் திருவிழா- 2022 நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்துடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து இதனை நடத்த இருக்கிறது. புத்தக திருவிழா வருகிற 28 ம்தேதி முதல் 4.01.2023 வரை காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை செங்கல்பட்டு, ஜி.எஸ்.டி. சாலை, அலிசன் காசி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடக்கிறது.

புத்தக அரங்குகள், கலை அரங்கம், உணவரங்கம் மற்றும் பல்வேறு ஆளுமைகள் தினந்தோறும் கலந்து கொண்டு சிறப்பாக இருக்கின்ற சிந்தனை அரங்கம் ஆகியவற்றுடன் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கி படித்து பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *