Spread the love

ராணிப்பேட்டை டிச, 21

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வங்கிகள் மூலம் அரசு துறைகள் பொதுமக்களுக்கு புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள், வேளாண்மை திட்டங்களுக்கு கடன் உதவிகள் மற்றும் மானிய நிதிகள் வழங்கப்பட்டு வருகிறது.

வங்கிகள் இத்திட்டங்களின் மக்களுக்கு வழங்கி வரும் கடனுதவிகளின் நிலவரங்கள், நிலுவைகள் மற்றும் காலதாமதங்கள் குறித்து வங்கியாளர்களுடன் ஆய்வு கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் பிரசன்னா, மாவட்ட தொழில் மையம் மேலாளர் ஆனந்தன், முன்னோடி வங்கிகளின் மேலாளர் ஆலியம்மா ஆபிரகாம் மற்றும் வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *