Spread the love

ராணிப்பேட்டை டிச, 17

ஆற்காடு வேளாண்மை ஒழுங் குமுறை விற்பனை கூடத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்தி ரங்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது பழுதான வாக்குப்பதிவு எந்திரங்களை பழுது நீக்கம் செய்வதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூரு பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று வாக்குப்பதிவு எந்திரங்களை பார்வையிட்டார். ஆற்காடு தாசில்தார் சுரேஷ், தேர்தல் தனி தாசில்தார் ஜெயக்குமார், தேர்தல்துணை தாசில்தார் சோனியா மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *