Spread the love

தஞ்சாவூர் டிச, 19

பாபநாசம் தாலுக்கா. மெலட்டூரில் செயல்பட்டு வந்த சரக வேளாண்மை விரிவாக்க மைய அலுவலக கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலை ஏற்பட்டதால் பழுதடைந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்று மெலட்டூரில் பழுதடைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தை இடித்துவிட்டு சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. கட்டுமான பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் புதிய கட்டிடம் இன்னும் திறக்கப்படாமல் பூட்டிய நிலையில் பயனற்று கிடக்கிறது.

மேலும் மெலட்டூரில் புதியதாக கட்டப்பட்டுள்ள வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டிடத்தை அரசு உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *