சிவகங்கை டிச, 17
திருப்புவனம் அருகே உள்ள பசியாபுரம் பகுதியில் திருப்புவனம் காவல் துணை ஆய்வாளர் ராமசுப்பிரமணியன் மற்றும் காவல் துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக ராமர் என்பவரை கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர