புதுச்சேரி டிச, 13
புதுச்சேரியில் நேற்று பரவலாக மழை பெய்தது. மழை எச்சரிக்கை ‘மாண்டஸ்’ புயலின் காரணமாக புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வந்தது. அந்த புயல் சென்னை அருகே கடந்த 3 நாட்களுக்கு முன்பு கரையை கடந்தது. அதன் பின்னர் மீனவர்கள் நேற்று முன்தினம் முதல் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
இந்த நிலையில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகக்கூடும். இது வரும் நாட்களில் மேற்கு, வடமேற்கு திசைகளில் நகர்ந்து இந்திய கடற்பகுதிகளை விட்டு விலகி செல்லும். இதன் காரணமாக தமிழகம்-புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 16 ம்தேதி வரை அனேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.