Spread the love

பென்னாகரம் ஆகஸ்ட், 9

கனமழை கர்நாடக மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளன. அணைகளின் பாதுகாப்பு கருதி 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1 லட்சத்து 22 ஆயிரத்து 969 கனஅடி உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1.40 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்தை தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர். நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது.

இதனால் ஒகேனக்கல்லில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் என காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் காவல் துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் வருவாய் துறையினர் காவிரி கரையோர பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *