தஞ்சாவூர் டிச, 8
தஞ்சை மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 36 பணியிடங்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் உடற்தகுதி தேர்வும், சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்தது. இதில் தகுதி அடிப்படையில் 34 ஆண்கள், ஒரு பெண், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 36 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா கலந்து கொண்டு புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஊர்க்காவல் படையினருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். தஞ்சை மாவட்ட ஊர்க்காவல் படையில் திருநங்கை தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.