நாகப்பட்டினம் டிச, 7
வேதாரண்யம் தாலுகா கள்ளிமேடு கிழக்கு பகுதியில் 63 குடும்பத்தினர் வசதித்து வருகின்றனர். இந்த குடும்பங்களுக்கு ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் வழங்கும் பணி ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம் செலவில் 350 மீட்டர் பைப் லைன் போடப்பட்டு முதல் கட்டமாக 18 குடும்பங்களுக்கு குடிதண்ணீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். மாநில விவசாயிகள் குழு உறுப்பினர் மகா குமார் மக்கள் பயன்பாட்டுக்கு குடிநீர் குழாயை திறந்து துவக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற துணை தலைவர் உத்திராபதி, உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க இயக்குனர், மச்சழகன், ஊர் பிரமுகர்கள் நமசி. நாகராஜ் திவாஸ்கர் ஊராட்சி செயலாளர் பிரியங்கா, ஊராட்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் காந்தி கஸ்தூரிபாய், ஊராட்சிமன்ற உறுப்பினர் ரேவதி தியாகராசன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்