Spread the love

நாகை டிச, 4
திருமருகல், திட்டச்சேரி, அம்பல், போலகம், திருக்கண்ணபுரம், திருப்பயத்தங்குடி, கங்களாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இந்த மழை விடிய, விடிய கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
இந்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழைநீர் கரைகள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சென்றது. நேற்று காலையும் மழை பெய்தது. இந்த மழையால் சம்பா இளம் நெற்பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *