நாகப்பட்டினம் டிச, 8
வங்க கடலில் உருவாகும் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது இதனால் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் கரை திரும்பவும் மீனவ கிராமங்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு கடற்கரை பகுதியில் மீன் பிடிக்க சென்ற 543 படகுகள் பாதுகாப்பாக உள்ளன. ஆந்திரா கடற் பகுதியில் மீன் பிடிக்க சென்ற படகுகளில் 31 படகுகள் கடை சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.