Spread the love

கடலூர் டிச, 6

சிதம்பரம் பள்ளிப்படை, பூதக்கேணி பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று வக்கீல் சண்முகசுந்தரம் தலைமையில் பள்ளிப்படை ஜமாத் தலைவர் ஜாபர் அலி, செயலாளர் அன்வர் அலி, பொருளாளர் சலாவுதீன் ஆகியோருடன் சிதம்பரம் துணை ஆட்சியர் அலுவலகத்தில் ஒன்று திரண்டனர்.

பின்னர் துணை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம், துணை ஆய்வாளர்கள் மணிகண்டன், வெங்கடேஷ் மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *