கோவை டிச, 6
புற்றுநோய் சிகிச்சை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையின் முன்னணி மருத்துவ மனையான கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் 26-வது ஆண்டாக மாரத்தான் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் கொடிய சைத்து தொடங்கி வைத்தார். இதில் புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள், மருத்துவர்கள், மருத்துவதுறை சார்ந்த வர்கள், செவிலியர்கள், மாணவர்கள் உட்பட 4000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாரத்தான் கோவில்பா ளையம் கே.எம்.சி.எச் மருத்து வமனையில் தொடங்கி அவினாசி ரோடு கே.எம்.சி.எச் மருத்துவமனையில் நிறைவுற்றது.
மாரத்தான் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையும், கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.