Spread the love

தூத்துக்குடி டிச, 5
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளையாட்டு வீரர்கள் உதவித் தொகை பெற இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

உதவித்தொகை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும்), பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இந்த திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான www.sdat.tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை வருகிற 15ம் தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம். ஏற்கனவே தபால் வழியில் அல்லது நேரடியாக விண்ணப்பித்து இருந்தாலும், மீண்டும் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

இணையவழியில் வரும் விண்ணப்பங்களைத் தவிர பிற விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு ஆடுகளம் தகவல் மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். என மாவட்ட ஆட்சியர் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *