துபாய் டிச, 4
ஐக்கிய அரபு அமீர்சகத்தின் 51வது தேசிய தினத்தை கொண்டாடும் விதமாக அமீரகத்தில் வசிக்கும் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்தவர்கள் (KEO) தனது குடுமபத்தினருடன் துபாயில் உள்ள சபீல் பூங்காவில் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
இக்கொண்டாட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுகள், திறன்களை ஊக்குவிக்கும் விதமான கேள்வி பதில்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் கொடுத்து மகிழ்ந்தார்கள்.
இந்நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக அறிவோம் தெளிவோம் மருத்துவர் மோனிகா, கேப்டன் டிவி முதன்மை நிருபர் கேவிஎல் கமால், க்ரீன் குளோப் நிறுவனர் சமூக சேவகி ஜாஸ்மீன், தினகுரல் தேசிய தமிழ் நாளிதழ் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழ் இனண-ஆசிரியர் நஜீம் மரிக்கா, திருநாவுக்கரசு, சட்ட ஆலோசகர் திவ்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் இவ்விழாவில் கீழக்கரையை சேர்ந்த சிறப்பு மாணவரான பஹிமின் தனித்திறன் நிகழ்வும் நடத்தப்பட்டு கௌரவிக்கப்பட்டது.