Spread the love

தஞ்சாவூர் நவ, 25

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை வடக்கு பிரிவு மின்சார வாரியத்திற்கு உட்பட்ட இருகரை மெயின் ரோடு தெருவை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்காமல் தாமதப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

எனவே மின் ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று அம்மாபேட்டை மின்வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு தூக்கு போடும் நூதன போராட்டத்தில் ஈடுப ட்டனர். விவசாய சங்க ஒன்றிய குழு தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.

மாவட்ட துணைத்தலைவர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் மாவட்ட தலைவி தாமரைச்செல்வி, கைத்தறி சங்க மாவட்ட செயலாளர் ராஜாராமன், ஒன்றிய குழு நிர்வாகிகள் பழனிச்சாமி, கண்ணன், ரமேஷ் குமார், காமாட்சி, மணிகண்டன், செல்வம், திருநாவுக்கரசு, சின்ன ராஜா, ராமலிங்கம், ராஜமாணிக்கம் உத்ராவதி உள்பட 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *