சிவகங்கை நவ, 24
சிவகங்கை சட்டமன்றத்தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் மதிப்பில் சிவகங்கை உழவர் சந்தை அருகே புதிய நூலக கட்டிடம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
இதில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் கலந்து கொண்டு நூலக கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த், நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி, ஒப்பந்ததாரர் முருகன், நகர் மன்ற உறுப்பினர்கள் ராபர்ட், கிருஷ்ணகுமார் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.