Spread the love

தூத்துக்குடி நவ, 21

உலக மீன் வளர் தினத்தை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் நாட்டின கெண்டை மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் மற்றும் மிதவை கூண்டுகளில் மீன் வளர்ப்பதற்கான பணி ஆணைகள் வழங்கும் விழா தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 2 லட்சம் நாட்டின கெண்டை மீன் குஞ்சுகளை ஆற்றில் விட்டார். தொடர்ந்து மீன் வளர்ப்பதற்கான பணி ஆணைகளையும் அவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், சட்ட மன்ற உறுப்பினர் சண்முகையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *