பென்னாகரம் நவ, 21
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் மஞ்ச நாயக்கன அள்ளி மற்றும் கலப்பம்பாடி ஆகிய ஊராட்சிகளில் குடிநீர், தெரு விளக்கு, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும். கால்நடை மருத்துவமனையை முழு நேர மருத்துவமனையாக மாற்ற வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். அனைத்து குடியிருப்புகளுக்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சக்கரவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் குமார், முதுபெரும் தலைவர் இளம்பருதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிசுபாலன், விசுவநாதன் சின்னசாமி, ரவி ஒன்றிய செயலாளர் சக்திவேல், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜீவானந்தம்,குமார், ராஜி , அன்பு ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினர். இடைக்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் நன்றி தெரிவித்தார்.