சென்னை நவ, 20
அதிமுக பொதுக்குழு வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இ.பி.எஸ் நடத்திய அதிமுக பொது குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் இ.பி.எஸ் தரப்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது இதை அடுத்து இதன் விசாரணை நாளை நடைபெற உள்ளது.