திருப்பத்தூர் நவ, 13
தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலை கடையில் பணிபுரியும் விற்பனையாளர்கள் பணியாளர்கள் சார்பில் தமிழ்நாடு தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் திருப்பத்தூர் அரிமா சங்கம் கட்டிடத்தில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். குமார் வரவேற்றார், மாவட்ட தலைவர் ஜெயக்குமார், ரமேஷ், கர்ணன், முன்னிலை வைத்தார், சிறப்பு அழைப்பாளராக மாநில பேரவை செயலாளர் பொன்னுராம், கலந்துகொண்டு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாநிலத் துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாநிலத் துணைத் தலைவர் வ.லௌ. மாணிக்கம், மாவட்ட கவுன்சில் செயலாளர் கலையரசன, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத்குமார், உட்பட பலர் பேசினார்கள்.
மேலும் திருப்பத்தூர் மாவட்ட புதிய நிர்வாகிகளாக மாவட்ட தலைவர் எம் ஜெயக்குமார், செயலாளராக சுரேஷ் மாவட்ட அமைப்புச் செயலாளராக ஆர் கர்ணன், உட்பட பல்வேறு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.