Spread the love

சென்னை ஆகஸ்ட், 6

186 நாடுகள் இடையிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இரு பிரிவுகளில் நடக்கும் இந்த செஸ் திருவிழா 11 சுற்றுகளை கொண்டது. இதன் முடிவில் அதிக புள்ளிகளை குவிக்கும் அணி மகுடம் சூடும்.
இதில் நேற்று நடந்த 7வது சுற்று ஆட்டத்தில் இந்திய ‘பி’ அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வீரர் பிரக்ஞானந்தா,கியூபா வீரர் இசான் ரெய்னால்டோ ஆகியோர் மோதினர்.

இதில் கியூபா வீரர் இசான் ரெய்னால்டோவை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 41-வது நகர்தலில் ரெய்னால்டோவை வீழ்த்தி வெற்றிபெற்றார்.

மேலும் செய்திகளை உடனே படிக்க.

http://www.vanakambharatham24x7news.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *