தர்மபுரி நவ, 6
தர்மபுரிமாவட்டம் கடத்தூர் பேரூராட்சி பகுதியில் பகுதி சபா கூட்டம் 4-வது வார்டு பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் மணி தலைமை தாங்கினார். சட்ட மன்ற உறுப்பினர் கார்த்திக் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் வினோத், நகர் மன்ற தலைவர் முனிராஜ். முன்னாள் பேரூராட்சி தலைவர் மாரிமுத்து, பச்சையப்பன், சதீஷ்குமார் உள்ளிட்ட அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் என ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.