Spread the love

கரூர் நவ, 2

ரயில்வே ஸ்டேஷன் மற்றும் மார்க்கெட் சாலை, சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக அதிகளவில் குப்பைகள் தேங்கியுள்ளன. இவற்றை அகற்றாததால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள், குப்பைகள் நிறைந்த பகுதியில் செல்ல முடியவில்லை. மேலும், தினமும், குப்பைகள் தேங்கி வருவதால், அவை அழுகி துர்நாற்றம் வீசுகிறது. எனவே, தினமும் குப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *