Spread the love

மயிலாடுதுறை அக், 31

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைமேலகரம் கிராம ஊராட்சியில் முஸ்லிம் கீழத் தெருவில் 15-வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்து 85 ஆயிரம் செலவில் தார்ச்சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் லலிதா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து ரூ.6 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பில் இந்திரா நகரில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணி, அங்கன்வாடி கட்டிடம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு செய்தார். இதேபோல மூவலூர் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலகத்தையும், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாதாந்திர வரவு,செலவு கணக்குகளையும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது ஒன்றிய ஆணையர் அன்பரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, ஒன்றிய பொறியாளர் மகேஸ்வரி மற்றும் ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *