Spread the love

திருவள்ளூர் அக், 29

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையினை பெறுவதற்கு பொது பிரிவு இளைஞர்களுக்கு தங்கள் கல்வித்தகுதியை பதிவு செய்து 5 வருடங்களும், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு வருடமும் போதுமானது. உதவி தொகை பெற விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட தொழில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ அல்லது https://tnvelaivaaippu.gov.in அல்லது https://employment exchange.tn.gov.in என்ற இணையதளத்தில் உதவித்தொகை விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

மேலும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் துறை அலுவலர் ஆகியோரின் கையொப்பம் முத்திரையினை பெற்று படிவத்தை பூர்த்தி செய்து வருகின்ற 30 ம்தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன், திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு்ம் மையத்திற்கு நேரில் வந்து சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *