Spread the love

ராணிப்பேட்டை அக், 29

டோக்கியோவில் ஜப்பான் அரசின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சக அதிகாரிகளுடன் அமைச்சர் காந்தி கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது ஜப்பான் நாட்டில் உள்ள ஜவுளி நிறுவனங்கள், தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் குறிப்பாக தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியில் ஈடுபடும் ஜவுளி நிறுவனங்களில் முதலீடு செய்ய கோரிக்கை வைத்தார்.

மேலும் நவம்பர் மாதம் சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச தொழில்நுட்ப ஜவுளி கண்காட்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். கைத்தறி மற்றும் கைத்திறன் அரசு முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், ஆணையர் வள்ளலார், அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *