ராணிப்பேட்டை அக், 31
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 288 கிராம ஊராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் குமார், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சீனிவாசன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.