அரியலூர் அக், 28
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில், மாவட்ட துணை கண்காணிப்பாளர் கலை கதிரவன் அறிவுறுத்தலின் படி, உடையார்பாளையம் உட்பட்ட பகுதிகளில் அரசு அறிவித்துள்ள சாலை விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கான புதிய உயர்த்தப்பட்ட அபராத தொகை மற்றும் சாலை விதிமுறைகள் குறித்து உடையார்பாளையம் காவல் உதவிஆய்வாளர் திருவேங்கடம் தலைமையிலான காவல் துறையினர் மற்றும் பயிற்சி உதவி ஆய்வாளர் பெனடிக் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி, விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் 50 க்கு மேற்பட்ட வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.