Spread the love

காஞ்சிபுரம் அக், 7

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை காலை 10 மணிக்கு, வட்டத்தில் முத்தவேடு, உத்திரமேரூர் வட்டத்தில் மேல்பாக்கம், வாலாஜாபாத் வட்டத்தில் அயிமிச்சேரி, ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் வெங்காடு, குன்றத்தூர் வட்டத்தில் கோவூர் போன்ற கிராமங்களில் பொது வினியோக குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

மேற்கண்ட கிராமங்களில் வசித்துவரும் பொது மக்கள் தங்கள் ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன்கார்டு, நகல் ரேஷன்கார்டு, கைப்பேசி பதிவு மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.

மேற்படி மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்படும். மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய ரேஷன்கார்டுகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம். மேற்படி, முகாம் நடைபெறும் இடங்களில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் கிருமி நாசினியை பயன்படுத்திடவும் என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *