நெல்லை செப், 23
நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள 1,483 வாக்குச்சாவடிகளிலும் 2 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அதன்படி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை முகாம் நடைபெறும். முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும், தங்களது ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையுடன் சென்று 6பி படிவத்தை பூர்த்தி செய்து பயன்பெறலாம். எனவே பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்கிறோம். மேலும் http://www.nvsp.in/ இந்த இணையதளம் மூலமும் ஆதார் எண்ணை இணைத்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
