Spread the love

அரியலூர் செப், 21

மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது மற்றும் ஏழாவது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். பள்ளிக் கல்வித்துறை ஆணையர் பணியிடத்தை ரத்து செய்து பழைய நிலையிலான பதவி உயர்வு வழி பள்ளிக் கல்வி இயக்குனர் பணியிடத்தை தொடரச்செய்ய வேண்டும். ஒரே நாடு, ஒரே கொள்கை என்ற ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். இதற்கான நிதியை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்ட தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவரும், மாவட்ட செயலாளருமான எழில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாவட்ட துணைத்தலைவர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட பொருளாளர் மார்ட்டின் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *