Spread the love

தென்காசி செப், 21

மாவட்டங்கள் தோறும் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அவ்வகையில் பாவூர்சத்திரம் த.பி.சொ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சுந்தரகுமார் தலைமை தாங்கினார். கீழப்பாவூர் யூனியன் தலைவி காவேரி, மாவட்ட கவுன்சிலர்கள் சாக்ரடீஸ், சுப்பிரமணியன், பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு 185 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கினார். இதில் ஒன்றிய திமுக செயலாளர் சீனித்துரை, ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி, தர்மராஜ், நகர காங்கிரஸ் தலைவர் சிங்ககுட்டி, பேரூராட்சி துணைத்தலைவர் ராஜசேகர், காங்கிரஸ் வட்டார பொருளாளர் குமார் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *