தர்மபுரி செப், 18
தர்மபுரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பெரியார் பிறந்த நாள் சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கி பெரியார் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பெரியார் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து ஆட்சியர் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆட்சியர் அலுவலக பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், தொழில் முனைவோர்கள் உள்ளிட்ட அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.