திருச்சி செப், 17
திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் நேஷனல் புக் ட்ரஸ்ட் இணைந்து புத்தக திருவிழாவை திருச்சி ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடத்தினர். இந்த விழா நேற்று தொடங்கியது.
இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தலைமை தாங்கி, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அரங்குகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.