Spread the love

நெல்லை செப், 16

நெல்லை சந்திப்பில் உள்ள ஈரடுக்கு மேம்பாலத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பாலத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத வாகனத்தில் கசிவு ஏற்பட்டு சாலையில் சிறிது தூரம் எண்ணெய் பரவியது. இதனால் அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் சாலையில் வழுக்கி விழுந்தனர்.

அதிர்ஷ்டவசமாக பெரிய வாகனங்கள் அந்நேரத்தில் வராததால் சாலையில் விழுந்தவர்கள் சிறு, காயங்களுடன் உயிர் தப்பினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதனையடுத்து பொதுமக்கள் தகவலின்பேரில் நெல்லை சந்திப்பு போக்குவரத்து பிரிவு துணை ஆய்வாளர் ஜான் கென்னடி தலைமையில் காவலர்கள் ராஜதுரை மற்றும் கோபால் ஆகியோர் ஈரடுக்கு மேம்பாலத்திற்கு விரைந்து சென்று அருகிலிருந்த மணலை கொண்டு சாலையில் காணப்பட்ட எண்ணெய் மீது போடப்பட்டது சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அனைத்து வாகனங்களும் வழக்கம் போல இந்த வழியில் அனுப்பப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *