திருவள்ளூர் செப், 16
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட மறுசீரமைப்பு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுடனான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முரளி, தேர்தல் தனி வட்டாட்சியர் செல்வம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.