Spread the love

விருதுநகர் செப், 12

நுகர்பொருள் வாணிபக்கழக அரிசி அரவை ஆலைகளில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புபிரிவு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். காவல் துறையினர் சோதனை தமிழக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் தலைமை இயக்குனர் ஆபாஷ் குமார் தமிழக முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், நுகர் பொருள் வாணிபக் கழகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள அரிசி அரவை ஆலைகளிலும் திடீர் சோதனை நடத்தி முறைகேடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

அதன்பேரில் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார், ஆய்வாளர் ஆல்பின் பிரிஜிட் மேரி ஆகியோர் தலைமையில் போலீசார் சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டையில் உள்ள 4 அரிசி அரவை ஆலைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *