Spread the love

நெல்லை செப், 6

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தூய்மை பாரத திட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தன், ராதாபுரம் வட்டார கிராமபுற வளர்ச்சி அலுவலர் பிச்சையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணக்குமார் வரவேற்று பேசினார். மாவட்ட திட்ட இயக்குனர் பழனி மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து வழங்குவதற்கான தலா 2 குப்பை தொட்டிகளை 300பேருக்கு வழங்கினார்.

மேலும் இவ்விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு மஞ்சப் பைகள் வழங்கப்பட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. விழாவில் பஞ்சாயத்து துணைத்தலைவர் தங்கம், உறுப்பினர்கள் வரத குணபாண்டியன், கவிதா, கிருஷ்ணவதி, ஜெயபால், பாலசரஸ்வதி, ஜெயராஜ், சமுக சேவகர் சரவணகுமார் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *