Spread the love

திருவள்ளூர் செப், 4

திருவள்ளூர் மாவட்டம் கும்பிடிப்பூண்டியில் ஒன்றிய குழு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அதிமுக நகர்மன்ற தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது சிறப்பாக பணியாற்றி வரும் அதிமுக நகர்மன்ற தலைவருக்கு ஆதரவாக நகர்மன்ற உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஜூலை 11ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதற்கு ஆதரவு தெரிவித்து அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக வின் பொதுச்செயலாளராக வரவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

முன்னதாக கும்பிடிப்பூண்டி நகர கழகம் சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். உடன் நகரச் செயலாளர் மன்ற உறுப்பினருமான ரவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *