Spread the love

தென்காசி ஜூலை, 31

குற்றாலம் சாரல் திருவிழா சின்னம் வடிவமைத்தவருக்கு ஆட்சியர் ஆகாஷ் ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கினார். தென்காசி குற்றாலத்தில் சாரல் திருவிழா வருகிற 5 ம்தேதி முதல் 12 ம்தேதி வரை நடக்கிறது. இந்த விழாவுக்கு சிறந்த முறையில் சின்னம் வடிவமைத்து அனுப்புபவரை தேர்வு செய்து ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்து இருந்தார்.

அதன்படி, தென்காசியை சேர்ந்த விக்னேஷ் அனுப்பிய சின்னம் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு அவருக்கு பரிசுத்தொகையான ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையை ஆட்சியர் வழங்கினார்.

#Vanakambharatham #courtalamCharal #festivallogo #news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *