சென்னை பிப், 13
கார்த்தியின் 29ம் படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை டானாக்காரன் இயக்குனர் தமிழ் இயக்குகிறார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ராமநாதபுரம் பகுதியில் கடல் பின்னணியை கொண்ட கேங்ஸ்டர் கதைக்களத்தில் படம் உருவாவதாக கூறப்படுகிறது. கார்த்தி தற்போது சர்தார் 2 படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.