புதுடெல்லி செப், 19
NPS வாச்சால்யா திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு குறைந்தது ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை இது ஒரு பென்ஷன் திட்டம் என்பதால் குழந்தைகளின் ஓய்வு காலத்திற்கு முதலீடு செய்யலாம். பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றிற்கு இத்திட்டம் உகந்ததல்ல.