புதுடெல்லி செப், 16
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு தன் பரிந்துரைகளை அளித்துள்ளது. மேலும் சட்ட கமிஷன் தனது பரிந்துரைகளை விரைவில் அளிக்க உள்ளது. அதேபோல கொரோனா பேரிடரால் ஒத்திவைக்கப்பட்ட சென்சஸ் கணக்கெடுப்பும் விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது.