சென்னை ஜூலை, 18
தமிழகத்துடனான காவிரி பிரச்சனை விரைவில் சீரடையும் என டி கே சிவக்குமார் கூறியுள்ளார். கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் இதனால் தமிழகத்துக்கு தினமும் ஒரு டிஎம்சிக்கு அதிகமாக நீர் திறக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன் தமிழகத்திற்கு 8000 அடி கன அடி மட்டுமே நீர் திறக்கப்படும் என அவர் கூறியிருந்தார்.